விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் --- சந்தை மதிப்பை வழங்கக் கோரி மனு

கோவை, நவம்பர் 6: கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு சந்தை மதிப்புத் தொகையினை வழங்கக் கோரி சின்னியம்பாளையம் ஜி.கே.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று  மனு அளித்தனர்.



அந்த மனுவில், கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நில ஆர்ஜிதம் செய்ய உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்து வருகிறது. ஆனால் ஏற்கனவே நில ஆர்ஜிதம் செய்யப்பட்ட நில உரிமையாளர்களுக்கு இதுவரை பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை.

இந்நிலையில் தற்போது, 600-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், 100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளும் உள்ள பகுதியில் எந்த அறிவிப்பும் இன்றி நில எடுப்பு செய்வதற்கான பணிகளை விமான நிலைய நிர்வாகமும், மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றன. மேலும், ஆர்ஜிதம் செய்யும் நிலத்திற்கு சதுர அடிக்கு 1500 ரூபாய் மட்டுமே வழங்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அந்த இடத்தின் சந்தை மதிப்பு 5000 முதல் 8000 ரூபாய் வரை உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் குறைந்த தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது முறையற்றது. மேலும், சில இடைத்தரகர்கள் மூலம் நிலத்தை கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. 

எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்த உரிய நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி பிரச்சனையை சுமூகமாக முடிக்க வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...