தங்கத்தை கெமிக்கல் பவுடராக மாற்றிக் கடத்த முயன்ற விமானப் பயணி கைது


கோவை, நவம்பர் 6: வெளிநாட்டில் இருந்து உடலில் மறைத்து தங்கத்தை எடுத்து வந்த பயணியை கோவை விமான நிலையத்தில் வைத்து சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். 



இலங்கை, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக தங்கம், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் போதைப் பொருட்கள் கோவை வழியாக இந்தியாவிற்குக் கடத்தப்படுவது நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சார்ஜாவில் இருந்து இன்று அதிகாலை கோவை விமான நிலையத்திற்கு வந்த ஏர் அரேபியா விமானப் பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். 



அப்போது, அப்துல் கரீம்(38) என்ற பயணி, தனது இருகால்களிலும் காயமடைந்ததற்கு மருத்துவக் கட்டு போட்டிருந்தார். அவரது நடையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், கரீமை பிடித்து தீவிர சோதனையிட்டனர். அவரது மருத்துவக் கட்டை பிரித்துப் பார்த்த போது, 6 தங்கக்கட்டிகளைப் பொடியாக்கி, கெமிக்கல் பவுடராக மாற்றி அதில் வைத்திருந்தார். இதனைக் கண்டு பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், 700 .கிராம். தங்கத் துகள்களை கடத்தி வந்ததை கரீம் ஒப்புக் கொண்டார். அந்த தங்க பௌடெரின் மதிப்பு 26 லட்ச ரூபாயாகும். 



அதனைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நடப்பாண்டில், கோவை விமான நிலையத்தில் மட்டும் ரூ.3.69 கோடி மதிப்புடைய 12.145 கி.கி எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதில், 9.5 கி.கி எடை அளவு தங்கம், இலங்கையில் இருந்து வந்த பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...