கிராமத்தில் சுற்றித் திரிந்த கழுதைப்புலிக்கு மருத்துவர்கள் சிகிச்சை

ஈரோடு, நவம்பர் 6: பவானிசாகர் வனப்பகுதியில் உடல்நலம் குன்றியநிலையில் சுற்றித்திரிந்த கழுதைப்புலிக்கு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.



ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பவானிசாகர் வனப்பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கழுதைப்புலி ஒன்று சுற்றித்திரிந்தது. இதைக்கண்ட கிராம மக்கள் உடனடியாக பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.



இதையடுத்து, வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கழுதைப்புலியை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். இந்நிலையில், விரட்டியடிக்கப்பட்ட கழுதைப்புலி மீண்டும் சோர்வுடன் சுற்றித்திரிந்தது. இதனால், பவானிசாகர் வனச்சரகர் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் உடல்நலம் குன்றிய நிலையில் இருந்த கழுதைப்புலியை பிடித்து கால்நடை சிகிச்சை மையத்திற்கு கொண்டு வந்தனர்.



பின்னர், வனத்துறை கால்நடை மருத்துவர் கே.அசோகன் உடல்நலம் குன்றிய கழுதைப்புலிக்கு சிகிச்சை அளித்தார். இதுகுறித்து அவர். கூறியதாவது : இந்த கழுதைப்புலிக்கு சுமார் 10 வயது இருக்கும். இது ஆண் கழுதைப்புலி. புலியின் பற்கள் சேதமடைந்ததால் நீண்டநாள் உணவு எடுத்துக்கொள்ளாமல் இருந்துள்ளது. மேலும், காதில் புழுக்கள் பிடித்துள்ளதால் சிகிச்சை அளிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றார்.



மேலும் அவர் கூறுகையில், உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள இந்த கழுதைப்புலிக்கு தொடர்ந்து சிகிச்சைகள் வழங்கி கண்காணித்து வருகின்றோம். மாமிசம் மற்றும் செர்லாக் உள்ளிட்ட ஆரோக்கியமான உணவுகள் வழங்கப்படுகிறது. 

இந்தியாவில், குறிப்பாக தென் இந்தியாவில் இதுபோன்ற கழுதைப்புலிகள் குறைவாகவே காணப்படுகின்றன. ஆப்பிரிக்க கழுதைப் புலிகள் பெரும்பாலும் இங்கு காணப்படுவதில்லை. கழுதைப்புலிக்கு கால்நடை மருத்துவர்களால் சிகிச்சை வழங்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும் என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...