கோவை அரசு மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்து கார் சேதம் : பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம் காரணமா?

கோவை, நவம்பர் 6: கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கட்டிடத்தின் ஒரு பகுதி இன்று இடிந்து விழுந்ததில் அருகில் நின்று கொண்டிருந்த காரின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.



கோவை அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரத்திற்கு மேற்பட்ட உள் மற்றும் வெளி நோயாளிகள்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இந்த மருத்துவமனையின் கட்டிடங்கள் மிக மோசமான நிலையில் இருப்பதோடு, நோயாளிகள் தங்குவதற்கான இடவசதி மிகவும் குறைவாக இருப்பதாக புகார் எழுந்தது.

இதை தொடர்ந்து, அம்மருத்துவமனை வளாகத்தில் ரூ.55 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்டும் பணி கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கியது. தொடர்ந்து கடந்த ஆண்டு புதிய கட்டிடங்கள் திறக்கப்பட்டன. 

பழைய கட்டிடங்களில் இருந்த பல்வேறு வார்டுகள் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டன. 

அப்போது நரம்பியல் துறை வார்டும் புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து பழைய நரம்பியல் துறை வார்டில் அரசு மருத்துவமனை ஆவண காப்பகம் மற்றும் குழந்தைகள் பிரிவு செயல்பட்டுவருகிறது.

இந்த நிலையில், கட்டிடத்தின் முன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 'சன்சைடு' (Sunshade) இன்று மதியம் திடீரென் இடிந்து விழுந்தது. 



இந்த விபத்தில் கட்டிடத்தின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த பெண் மருத்துவர் ஒருவரின் காரின் முன்பக்க கண்ணடி உடைந்து சேதமடைந்தது. 

பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இப்பகுதியில் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்த சம்பவம் அம்மருத்துவமனைக்கு வந்துசெல்வோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.



இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'அரசு மருத்துவமனையில் செயல்படும் பழைய கட்டிடங்களில் முதன்மையாக புனரமைக்கப்பட வேண்டிய கட்டிங்களுள் ஒன்றாக நரம்பியல் துறையின் பழைய கட்டிடம் இருக்கிறது. இந்த கட்டிடத்தை புனரமைக்க வேண்டும் என்று மருத்துவமனை முதல்வர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார். ஆனால், இதுவரையில் கட்டிடத்தை புனரமைக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கவில்லை' என்றார். 

பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் அரசு மருத்துவமனையில் கட்டிடம் பழுதாகியுள்ளது என்றும், உடனடியாக புனரமைக்கப்பட வேண்டும் என்றும் மருத்துவ அதிகாரிகள் பொதுப்பணித் துறைக்கு தகவல் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அவர்களின் அலட்சியப்போக்கை காட்டுவதாகவும் இந்த விபத்திற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...