நீலகிரியில் அரிய வகை புள்ளி ஆந்தை மீட்பு


நீலகிரி, நவம்பர் 7: நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தினுள் நுழைந்த புள்ளி ஆந்தை பிடிக்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலக கேன்டீனில் ஆந்தை ஒன்று பிடிபட்டது. ஆந்தையை அங்கு பணிபுரிபவரும், வன ஆர்வலருமான ரமேஷ் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.



பாம்புகளை பிடிப்பதில் திறமை வாய்ந்த ரமேஷ் இந்த ஆந்தை குறித்து கூறுகையில், இது அரிய வகை புள்ளி ஆந்தை. மலை பிரதேசங்களை விட சமவெளி பகுதிகளிலேயே அதிகளவில் இருக்கும். எலிகளை விரும்பி உண்ணும் இந்த ஆந்தை முதல் நாள் பிடித்து சாப்பிட்ட உணவை மறுநாள் வாய்வழியாகவே வெளியேற்றி விட்டு புதிய உணவை உண்ணும் பழக்கத்தை கொண்டவை என்றார்.

இதுபோன்ற பறவை, விலங்குகள் குறித்து பல்வேறு தகவல்களை அறிந்துள்ள ரமேஷ், பாம்புகளை பிடிப்பதில் திறமையானவர் என்பதும், பரதநாட்டியத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...