கேபிள் கம்பிகள் அறுந்து கீழே விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

பீளமேடு பகுதியில் உள்ள செங்காளியப்பன் நகர் (வார்டு எண். 38) அருகே அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தில், கேபிள் கம்பிகள் அறுந்து கீழே விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.



இன்று அதிகாலை மேம்பாலத்தை ரயில் கடந்து செல்லும்பொழுது அதிர்வு தாங்காமல் கேபிள் கம்பிகள் அறுந்து விழுந்ததாகவும், ரயில்வே மேம்பாலம் முறையாக பராமரிக்கப் படாததால் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருவதாகவும் இப்பகுதி மக்கள் புகாரளித்தனர்.



'அதிகாலை நேரத்தில் கம்பிகள் அறுந்து விழுந்ததால் விபத்துகள் ஏற்படவில்லை. ஆனால், அறுந்து விழுந்த கம்பிகள் மின்கம்பிகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தால் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு காத்திருந்தனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின் பொதுமக்கள் சிலர், அவற்றை சோதித்து, சாலையோரமாக ஒதுக்கிவைத்தனர்' என்று கூறினார் இப்பகுதியில் வசிக்கும் திரு. சண்முகம்.



காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் இப்பகுதியை கடந்து வேலைக்கு செல்பவர்களும், பள்ளி செல்லும் மாணவர்களும் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர். மேலும், வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டியுள்ளதால் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகமாகிக்கொண்டே இருக்கின்றது. 

பல மணி நேரமாக கீழே விழுந்த கேபிள் கம்பிகள் அகற்றப்படாத நிலையில், தற்போது இப்பகுதிக்கு வந்த ரயில்வே ஊழியர்கள் கேபிள் கம்பிகளை அகற்றி, போக்குவரத்தை சரிசெய்து வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...