பிரச்சனைகளை பேச கமல் அறிமுகம் செய்த செயலி 'மய்யம் விசில்'

பிரச்னைகளைப் பற்றிப் பேச கமல்ஹாசன் மய்யம் விசில் (maiamwhistle) என்ற செயலியை அறிமுகப்படுத்தினார்.

கமல்ஹாசனின் 63-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தி.நகரில் நற்பணி மன்றம் சார்பில் புதிய செயலி அறிமுக விழா நடைபெற்றது.  இந்த விழாவில் பேசிய கமல், “மக்கள் பிரச்னைகளை தெரிந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருக்கிறேன். நான் சுற்றுப்பயணம் செய்து கொள்வது கற்றுக் கொள்வதற்காகத் தான். நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவது எனது கனவு. நல்லது செய்வதையும் பண்பறிந்து, ஜாக்கிரதையாக செய்ய வேண்டும்” என்று கூறினார். 

இந்த நிகழ்ச்சியில் கமல்  maiamwhistle என்ற செயலியை அறிமுகப்படுத்தி வைத்தார். இது வெறும் ஆப் அல்ல ஒரு பொது அரங்கம் என்றும் அவர் கூறினார். இந்தச் செயலியின் மூலம் தன்னைப் பற்றிய குறைபாடுகள் இருந்தாலும் சொல்லலாம் என்றும் அவர் கூறினார். 

மேலும், மக்கள் பிரச்னைகளை பற்றிப் பேச #theditheerpomvaa #maiamwhistle #virtuouscycles என்ற ஹேஷ்டேக்குகளை கமல் அறிமுகம் செய்தார். இந்த ஹேஷ்டேக்குகளில் மக்கள் பிரச்னைகளைப் பேசலாம் என்று கூறிய கமல் தான் ஏதாவது தவறு செய்தால் அது குறித்தும் பேசலாம் என்றும் கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...