கந்துவட்டி கொடுமையில் இருந்து காப்பாற்றக்கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் 5 பேர் மனு

கோவை, நவம்பர் 7: கந்துவட்டிக் கொடுமையில் இருந்து தங்களை காப்பாற்றுமாறு கோவை மாநகர காவல் ஆணையர் திரு. அமல்ராஜிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.



சவுரிபாளையம் பகுதியில் சுப்ரமணி என்பவர் கந்துவட்டி தொழில் செய்து வருகிறார். இவரிடம், குருராசன், மணிகண்டன், விஜயேந்திர பூபதி, கார்த்திகேயன், ரெஜிஸ் சாந்தகுமார் ஆகிய ஐந்து பேரும் தொழில் தொடங்கக் கந்துவட்டிக்கு பணம் வாங்கியுள்ளனர். இதில், குருராசன் என்பவர் ரூ.1.80 லட்சம் வாங்கியதாகவும், இதுவரை ரூ.7.89 லட்சம் வட்டி மட்டுமே கட்டிவிட்டதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதேபோல, வாங்கிய தொகையை விட 3 மடங்கு தொகையை மற்ற அனைவரும் கட்டி விட்ட பிறகும், இன்னும் பணம் வேண்டும் என சுப்ரமணி தங்களை மிரட்டுவதாகப் பாதிக்கப்பட்ட 5 பேரும் இன்று (நவம்.,7) கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். 

தொழில் துவங்க ரூ.7 லட்சம் பணம் வாங்கி தற்போது வரை 10 மடங்கு அதிகமாக பணம் கட்டியும், மேலும், ரூ.20 லட்சம் செலுத்துமாறு சுப்ரமணி வீட்டிற்கு வந்து மிரட்டுவதாக மணிகண்டன் புகார் தெரிவித்தார். மேலும், வட்டிக்கு பணம் வாங்கும் போது உறுதிமொழி பத்திரம், நிரப்பப்படாத மூன்று காசோலைகள் என பல்வேறு உறுதி தாள்களை வாங்கி வைத்துக்கொண்டு தங்களை தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...