கொடிசியா அருகே உருவாகியுள்ள கழிவுநீர் குட்டை

கோவை, நவம்பர் 08: கொடிசியாவிலிருந்து கோவை விமான நிலையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள நீர் வாய்க்காலின் பாதை துண்டிக்கப்பட்டுள்ளதால், மழைநீரும் கழிவுநீரும் வாய்க்காலின் ஒரு பகுதியில் தேங்கி, நீர் குட்டையாக உருவாகியுள்ளது. இதனால், டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலை பரப்பும் ஆபத்தான கொசுக்கள் உருவாக அதிகம் வாய்ப்புள்ளதாக இப்பகுதி மக்கள் புகாரளிக்கின்றனர்.



கொடிசியா மற்றும் அதனை ஒட்டியுள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரும், மழைநீரும் இந்த வாய்க்கால் வழியாக வடிந்து அவினாசி சாலை நோக்கி செல்கிறது. இந்நிலையில், சுமார் முப்பது அடி நீளத்திற்கு வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கொடிசியா வளாகம் அருகிலேயே கழிவுநீர் தேங்கி சாலையை நோக்கி வடியத்தொடங்கியுள்ளது.



‘பல மாதங்களாக இந்த வாய்க்கால் பராமரிக்கப்படாததால் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு, மழைக்காலங்களில் நீர் வடிய வழியின்றி சாலையை நோக்கி வருகின்றது. இதனால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும், வாய்க்காலின் அருகே உள்ள தனியார் நிலத்தின் உரிமையாளர்கள் சிலர், வாய்க்காலின் பாதையில் மண் அடைப்பு ஏற்ப்படுத்தி, கம்பி வேலி அமைத்து ஆக்கிரமித்து வருவதாக’ குடியிருப்பு வாசிகள் புகாரளிகின்றனர்.

இந்நிலையில், தனியார் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில், உரிமையாளருடைய தொடர்பு எண்கள் சாமர்த்தியமாக அழிக்கப்பட்டுள்ளன.



‘உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு, வாய்க்காலில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரிசெய்வதோடு ஆக்கிரமிப்பாளர்களையும் கடுமையாக தண்டிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார் ஓர் குடியிருப்பு வாசி.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...