பணமதிப்பிழப்பு ஒரு பெரும் வெற்றி: வானதி ஸ்ரீனிவாசன்

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கியில் வரிசையின் நின்று உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக மத்திய அரசிடம் எந்த ஏற்பாடும் இல்லை எனவும் இது குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என பா.ஜ.க மாநில செயலாளர் வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.



கோவை காந்திபுரம் பா.ஜ.க அலுவலகத்தில் அவர்இன்று செய்தியாளகளை சந்தித்தார். அப்போது பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக 17.2 லட்சம் சந்தேகத்திற்கிடமான பணபரிவத்தனைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், 3.68 லட்சம் கோடி பணம் சந்தேகத்திற்குரியது என கண்டறியப்பட்டு இருப்பதாகவும், 7.62 லட்சம் கள்ள நோட்டுகள் கண்டறியப்பட்டுள்ளது எனவும், 1626 கோடி பெறுமானமுள்ள பினாமி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் புள்ளி விபரங்களை வெளியிட்ட அவர், காஷ்மீரில் 75 சதவீதம் கல்லெறியும் சம்பவங்கள் குறைந்து இருப்பதாகவும் தெரிவித்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையாலும், ஜி.எஸ்.டியாலும் சிறு, குறு நிறுவங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை களைய நடவடிக்கைகள் எடுக்கப்டுவதாகவும் அவர் தெரிவித்தார். 99 சதவீதம் பணம் திரும்பி வந்திருந்தாலும் அதில் கணக்கில் காட்டப்படாமல் இருக்கும் குறித்து விசாரணை நடத்தப்படுகின்றது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிகளில் வரிசையில் நின்று உயிரிழந்த பொதுமக்களுக்கு நிவாரணம் கொடுப்பது தொடர்பாக மத்திய அரசிடம் ஏற்பாடு எதுவும் இல்லை எனவும் இது தொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்துவதாகவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...