சிட் கம்பெனியில் முதலீடு செய்தோர் போலீஸ் ஆபீஸ் முற்றுகை

திரிபுரா சிட்பண்ட்ஸ் என்ற நிதி நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டவர்கள் புகார் கொடுத்தும் மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலைகழிப்பதாக கூறி ஆட்சியர் அலுவலக வாயிலை முற்றுகையிட்டதால் பரபரப்பு.

கோவை திருச்சி சாலை, சத்தி சாலை, குனியமுத்தூர் ஆகிய பகுதிகளில் திரிபுரா சிட்பண்ட்ஸ் என்ற நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிதி நிறுவனத்தில் மாதம், வாரம், தினசரி என்ற அடிப்படையில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தி வந்தனர். இந்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு பணம் திருப்பி தருவதில் கால தாமதம் செய்து வந்த அந்நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு காசோலை வழங்கியுள்ளது. ஆனால் அந்நிறுவனத்தின் வங்கி கணக்கில் பணம் இல்லை என வங்கி அதிகாரிகள் தெரிவித்ததாகவும், அதன்பின்னர் திரிபுரா சிட்பண்ட்ஸ் நிறுவனத்தின் கிளைகள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதாகவும் வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கோவை மாநகர குற்றப்பிரிவு காவல் துறையினர் கடந்த திங்கட்கிழமை புகார் அளித்தனர். அப்புகாரில் 2 கோடி ரூபாய் அளவிற்கு திரிபுரா சிட்பண்ட்ஸ் நிதி நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்திருப்பதாக தெரிவித்தனர். அந்நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பணத்தை திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினர் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை எனவும், இது தொடர்பாக கேட்டால் தொடர்ச்சியாக அலைகழிக்கப்படுவதாக குற்றம் சாட்டினர். பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நியாயம் கிடைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வாயிலை முற்றுகையிட்டு இருபது நிமிடங்களுக்கு மேலாக சாலையை மறித்து நின்றனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் வாகனங்கள் வெளியேயும் உள்ளேயும், செல்ல முடியாமல் நின்றது. இருபது நிமிடத்திற்கு பிறகு வந்த காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக கூறி பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.



Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...