மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளிக்க பிரத்யேக செயலி அறிமுகம்


கோவை, நவம்பர் 10: கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, ஸ்மார்ட் ட்ரீ, சென்சார் குப்பைத் தொட்டிகள், சுற்றுச்சூழலை பாதிக்காத மக்கும் தன்மையுடைய பைகள் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதனைத்தொடர்ந்து, தற்போது பொதுமக்கள் தங்களுடைய புகார்களை மாநகராட்சி நிர்வாகத்திடம் எளிதாகவும், விரைவாகவும் தெரிவிப்பதற்காக பிரத்யேக செயலியை CCMC Central (Citizens Grievance Redressal App) அறிமுகப்படுத்தியுள்ளது.



மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளில் நிலவும் குடிநீர் விநியோகம், சுகாதாரம், கல்வி, நகரமைப்பு, வரி, தேர்தல், இ-சேவை மற்றும் இதர பிரச்சனைகள் பற்றிய புகார்களை இந்த செயலியின் மூலம் எளிதாக பதியலாம். 

குறிப்பாக, புகாரை பதியும்பொழுது அது தொடர்பான உண்மைத் தன்மையுடைய புகைப்படத்தையும் இணைத்து பதிய வேண்டும். மேலும், புகார் சம்பந்தப்பட்ட மண்டலம், வார்டு மற்றும் பாதிப்புகள் குறித்தும் இச்செயலியில் பதிய வேண்டும்.



புகார் அளித்துமுடித்த பின்பு அதற்கான பிரத்யேக எண் மனுதாரருக்கு வழங்கப்படுகிறது. மேலும், அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கும் அலுவலர் குறித்த விபரங்களும் தெரிவிக்கப்படுகின்றன.

முன்னதாக, மாநகராட்சி குறித்த புகார்களை எந்த அலுவலரிடம் தெரிவிப்பது, அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என மக்கள் மத்தியில் அறியாமையே நிலவி வந்தது. இந்நிலையில், மக்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வு காணும் வகையிலும், புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்ற தகவலையும் உள்ளடக்கி அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த செயலி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



மாநகராட்சியின் இந்த செயலியினை பதிவிறக்கம் செய்ய "https://goo.gl/TPagds"

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...