சிறையில் 5-வது நாளாக உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் நீதிமன்றத்தில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

கோவை, நவம்பர் 10

கோவை மத்திய சிறையில் 5-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் பிரபாகரன், சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது மயங்கி விழுந்தார்.

சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையை உயர்த்தி வழங்கக் கோரி, கருமத்தம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் சமூக ஆர்வலர் பிரபாகரன், மனோகரன், வேலுச்சாமி ஆகியோர் கடந்த 6-ம் தேதி போராட்டம் நடத்தினர். தடையை மீறி போராட்டம் நடத்தியதால் 3 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளைப் போலீஸார் பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, அவர்கள் 3 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

இதனைக் கண்டித்து 3 பேரும் கோவை மத்திய சிறையில் இன்று 5-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில், கனியூர் சுங்கச்சாவடிக்கு எதிராக போராட்டம் நடத்திய வழக்கு தொடர்பாக சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து செல்லப்பட்ட போது, பிரபாகரன் நீதிமன்ற வளாகத்தில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பிரபாகரன் சூலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...