போலீஸ் பாய்ஸ் கிளப்பைச் சேர்ந்த குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்

கோவை, நவம்பர் 11

போலீஸ் பாய்ஸ் கிளப்பைச் சேர்ந்த 9 வயது முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது. 



கோயம்புத்துார் யுனைடெட் ரவுண்ட் டேபிள் 186 மற்றும் ஏஆர்சி குழுமம், ஷிவா டெக்ஸ் யார்ன் ஆகியவற்றின் சார்பில் கோவை ஈச்சனாரியில் உள்ள லட்சுமி கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் இந்த மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற கோவை மருத்துவர்கள் பங்கேற்ற இந்த முகாமில், 9–15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பொதுவான மருத்துவ பரிசோதனைகள், பல், கண் போன்ற பரிசோதனைகள் நடத்தப்பட்டன. 



மருத்துவப் பரிசோதனைக்குப்பின் குழந்தைகளை உற்சாகப்படுத்தும் வகையில் படங்கள் காண்பிக்கப்பட்டன. காலை மற்றும் மதிய உணவும் வழங்கப்பட்டன. 



இதில், கோவை காவல்துறை, சட்டம், ஒழுங்குத் துணை ஆணையர் லட்சுமி, கவுரவ விருந்தினராக பங்கேற்றார். ரவுண்ட் டேபிள் இன்டியாவின் ஏரியா 7-ன் திட்ட ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், இளங்கோ ஆகியோர் கவுரவ விருந்தினராக பங்கேற்றனர்.

குழந்தைகளுக்கு இந்த மருத்துவ முகாம், சுகாதாரத்துக்கும், ஆரோக்கியத்துக்கும் மட்டுமின்றி திரைப்படமும் கண்டு களித்து, சிறந்த பொழுதுபோக்காகவும் அமைந்தது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...