பிரதமர், நிதியமைச்சருக்கு இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு நன்றி

கோவை, நவம்பர் 11: 178 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கைக்கு இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. 28 சதவீத ஜிஎஸ்டி வரியின் கீழ் உள்ள சிமெண்டின் வரியை குறைக்க மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு உள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 23-வது ஆலோசனைக் கூட்டம், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் 2 நாட்கள் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், ஏசி ரெஸ்டாரன்ட்களில் வழங்கப்படும் உணவுகளின் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சாக்லேட்கள், சூயிங் கம், ஷாம்பூ, சோப்பு, ஷூ பாலிஷ், ட்யோடரென்ட், சத்துள்ள பானங்கள், மார்பிள், அழகு சாதன பொருட்கள் ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கான அழகு சாதன மூலப் பொருட்கள், ஷேவிங் மற்றும் ஷேவிங்கிற்கு பிறகு பயன்படுத்தும் பொருட்கள், சலவை பவுடர்கள், கிரானைட் ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் தலைவர் வனிதா மோகன் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 178 பொருட்கள் மீது மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கையை இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு வரவேற்கிறது. பிரதமர் மோடிக்கும், நிதியமைச்சர் அருண்ஜேட்லிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வரி குறைப்பு நடவடிக்கையால், உற்பத்தி மற்றும் தொழில் துறையில் நிலவி வந்த பிரச்சனைகளுக்கு தீர்வு, சிறு மற்றும் குறு தொழிலாளர்களின் வியாரபாரம் மீண்டும் தலைத்தோங்கும். முறையாக வரி செலுத்துவோருக்கு இணக்கம் ஏற்பட்டுள்ளது.

பிரதமர் மோடி கூறியதைப் போலவே ஜிஎஸ்டி வரிக் குறைக்கப்பட்டதால், மக்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான உறவு மேலும் வலுவடைந்துள்ளது. மேலும், 28 சதவீத ஜிஎஸ்டி வரியின் கீழ் உள்ள சிமெண்டின் வரியை குறைக்க மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...