கோவையைச் சேர்ந்த தொழிலதிபரின் செல்போன் எண்ணை 'ஹேக்' செய்து ரூ. 12.75 லட்சம் கொள்ளை



கோவை, நவம்பர். 12: 

கோவை என்.ஜி.ஜி.ஓ காலனி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (45). துடியலூர் பகுதியில் இயந்திர உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். 

இவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.12.75 லட்சம் பணம் காணாமல் போனதாக கடந்த வாரம் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடந்த 2 மாதங்களுக்கு முன் ஆறுமுகம் செல்போன் சிம்கார்டு வேலை செய்யவில்லை. இது தொடர்பாக சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் புகார் அளித்திருந்தார். அப்போது அந்த சிம்கார்டு வேறு ஒரு நபர் உபயோகித்துக்கொண்டிருப்பது தெரியவந்தது. 

அதே நேரத்தில், சிம்கார்டினை கொண்டு வங்கிக்கணக்கை 'ஹேக்' செய்த மர்ம நபர்கள் அதில் இருந்து இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ரூ.12 லட்சத்து 75 ஆயிரம் வரை பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.  கொள்ளையடிக்கப்பட்ட பணம் லக்னோ மற்றும் டெல்லியில் உள்ள இரு வங்கிக்கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போது ஆறுமுகம் வங்கிக்கணக்கில் இருந்து இரு வேறு வங்கிக்கணக்கிற்கு பணத்தினை 'ஆர்.டி.ஜி.எஸ்' இணையவழி பண பரிமாற்றம் மூலமாக கொள்ளையடித்தது தெரியவந்தது.  மேலும், சம்மந்தப்பட்ட வங்கிக்கணக்கு வடமாநிலத்தை சேர்ந்ததாக தெரியவந்துள்ளது, என்று கூறினார். 

இந்த நிலையில், சம்மந்தப்பட்ட வங்கிக்கணக்கு யாருக்கு சொந்தமானது? என்பது  தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   வங்கிக்கணக்கில்  இருந்து ரூ.12.75 லட்சம் கொள்ளை போன சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பீதியை உண்டாக்கியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...