கேஎம்சிஎச் புற்று நோய் மையத்தின் 6-ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை, நவம்பர் 12

கேஎம்சிஎச் புற்றுநோய் மையத்தின் 6-ஆம் ஆண்டு விழா இன்று புற்று நோயிலிருந்து குணமடைந்த 300 நபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் கொண்டாடப்பட்டது.

கேஎம்சிஎச்-யின் புற்றுநோய் மையம் கடந்த 2011-ம் ஆண்டு துவங்கப்பட்டு, தற்போது புற்றுநோய் மருத்துவம், ஆராய்ச்சி மற்றும் கல்வி ஆகியவற்றுடன் வளர்ச்சியடைந்துள்ளது. மேலும், இங்கு கதிரியக்க சிகிச்சை, ஆழமான காயம் தவிர்க்கும் எந்திர அறுவை சிகிச்சை, கீமோ சிகிச்சை, பாதிக்கப்பட்ட உடற்பகுதிக்கு மட்டுமான சிகிச்சை, ஹேமட்டோ சிகிச்சை ஆகிய அனைத்துவகை மருத்துவங்களும் வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாகக் கடந்த 6 ஆண்டுகளில், இந்த மையம் 20,000-க்கும் மேலான புற்று நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொண்டுள்ளது. 32000-க்கும் அதிகமானோர் கீமோ சிகிச்சைகளையும், 4000-க்கும் அதிகமானோருக்கு ரேடியோ சிகிச்சைகளையும் அளித்துள்ளது.

இதனிடையே, இன்று கேஎம்சிஎச் மருத்துவமனையில் புற்று நோய் மையத்தின் 6-ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற அம்மருத்துவமனைத் தலைவர் மருத்துவர் நல்ல ஜி. பழனிசாமி பேசுகையில், "புற்று நோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால் குணப்படுத்த முடியும். அதேவேளையில், இரண்டாம் நிலையில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் வாழ்வு நாட்களையும் நீட்டிக்கச் செய்ய இயலும். வலி நிவாரணநிலை, ஆதரவு நிலை என்ற நிலையிலுள்ள நோயாளிகளுக்கும்கூட வாழும் தரத்தை மேம்படுத்த கேஎம்சிஎச் என்றும் முயற்சிக்கிறது.

சிகிச்சையைப் போலவே நோய்த் தடுப்பும் முக்கியம். தொடர்ந்து பொதுமக்களிடையே நோயைக் கண்டறியவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உதவி வருகிறது," என்றார்.

இந்நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராகப் பங்கேற்ற 'கலைமாமணி' திரு. மரபின்மைந்தன் முத்தையா, புற்றுநோயிலிருந்து மீண்டவர்களிடம் தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சிறப்புரையாற்றினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...