தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை மாநகர் பகுதிக்குள் அனுமதிப்பதில்லை - காவல்துறை துணை ஆணையர்

கோவை, நவம்பர். 13: தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளை மாநகர எல்லைக்குள் அனுமதிப்பதில்லை என்று கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் சுஜித்குமார் கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் நமக்களித்த பேட்டியில் கூறியதாவது:-

கோவையில் நடபெறும் விபத்துக்களில் 90 சதவிகித உயிரிழப்புகள்தலைக்கவசம் அணியாமல் செல்வதால் தான் ஏற்படுகிறது. ஜனவரி மாதம் முதல் தற்போது வரையில் 111 பேர் தலைக்கவசம் அணியாமல் சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 

மேலும், இருசக்கர வாகன ஓட்டிகளால் 71 பாதசாரிகள் உயிரிழந்துள்ளனர். 

கோவை மாநகரின் எல்லைப்பகுதிகளில் சரவணம்பட்டி, சின்னியம்பாளையம், திருச்சி சாலை காமாட்சிபுரம், ஈச்சனாரி, பேரூர், சுகுணாபுரம் போன்ற பல்வேறு பகுதிகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

புறநகர் பகுதிகளில் இருந்து மாநகர் பகுதிக்குள் நுழையும் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் இருந்தால் வாகனத் தணிக்கையின் போது அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. 

அதோடு, சோதனைச்சாவடிகளின் அருகேயே தலைக்கவசம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு, அங்கு அவர்கள் அதை வாங்கி அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள். 

அதேபோல், சீட் பெல்ட் அணியாமல் மாநகர் பகுதிகளில் இருந்து புற நகர் பகுதிகளுக்கு செல்லும் கார் ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. 

இந்த வாகனத் தணிக்கை தொடந்து நடைபெறும். மக்களின் நலன் காக்கவே காவல்துறையினர் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் என்பதை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...