சர்வதேச எஸ்ஐபி அபாகஸ் போட்டியில் 3600 குழந்தைகள் பங்கேற்பு

கோவை, நவம்பர் 12:

எஸ்ஐபி அகாடமி இந்தியா சார்பில் நடைபெற்ற சர்வதேச அபாகஸ் போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்து 3600 குழந்தைகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.



கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் எஸ்ஐபி அகாடமி இந்தியா சார்பில் சர்வதேச அபாகஸ் போட்டி நடைபெற்றது. இதில், மலேசியா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஐக்கிய அரபு நாடுகள், இலங்கை, தன்சானியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 200 குழந்தைகளும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 3400 குழந்தைகளும் பங்கேற்றனர். இப்போட்டியினை கோவை மாவட்ட ஆட்சியர் திரு. டி.என். ஹரிஹரன் துவக்கி வைத்தார்.

6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இடையே நடைபெற்ற இந்தப் போட்டியில் 5 நிமிடங்களில் 200 வினாக்களுக்கு போட்டியாளர்கள் விடையளித்தனர். இறுதியில் வெற்றி பெற்ற 600 போட்டியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், இந்தப் போட்டி லிம்கா புக் ஆப் ரெக்கார்டிலும் இடம்பிடித்துள்ளது.



இதுகுறித்து எஸ்ஐபி அகாடமி இந்தியா-வின் நிர்வாக இயக்குநர் மற்றும் நிறுவனர் திரு. தினேஷ் விக்டர் கூறுகையில், 'இது போன்ற போட்டிகளில் குழந்தைகள் பங்கேற்பதால் மன ஒருமைப்பாடு, காட்சி நினைவு, எண்திறன், கவனிக்கும் திறன் உள்ளிட்டவை மேம்படுகிறது. மேலும், அவர்கள் தன்னம்பிக்கையும் பெறுகின்றனர்' என்றார்.



Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...