காட்டு யானைகளால் விவசாய நிலம் பாதிக்கப்படுவதாக ஆட்சியரிடம் புகார்

கோவை, நவம்பர் 13

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை வட்டார பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அவ்வப்போது, வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் விவசாய நிலங்களில் முகாமிட்டு பயிர்களை சேதம் செய்து வருவதாகத் தொடர்ந்து விவசாயிகள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் காட்டு யானைகளால் பாதிக்கப்பட்ட சிறுமுகை பகுதி விவசாயிகள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், 'சமீப காலமாக காட்டு யானைகள் மற்றும் பன்றிகள் அதிகளவில் விவசாய நிலங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன . இதுதொடர்பாக பல முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. காட்டு யானைகளைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பெரிய அளவில் போராட்டம் நடத்தவுள்ளோம்' எனத் தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...