ஒரே வண்டியில் மூன்று பிரேதங்களை எடுத்துச்செல்ல நிர்பந்திப்பதை கண்டித்து அமரர் ஊர்தி ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, நவம்பர் 13: 

ஒரே வண்டியில் மூன்று பிரேதங்களை எடுத்துச்செல்ல வலியுறுத்தும் செஞ்சிலுவைச்சங்க நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு அரசு அமரர் ஊர்தி வாகன ஓட்டுனர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் உயிரிழப்போரை அவரவர் வீட்டிற்கு கொண்டு செல்ல இலவச அமரர் ஊர்தி சேவை செயல்பட்டு வருகிறது. இந்த அமரர் ஊர்தி சேவையை செஞ்சிலுவைச்சங்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. 

சமீபகாலமாக அரசின் அமரர் ஊரிதியில் ஒரே நேரத்தில் மூன்று பிரேதங்களை எடுத்துச்செல்வதாக புகார் எழுந்தது. இந்த சூழலில் மாவட்ட திட்ட உதவியாளர் மற்றும் செஞ்சிலுவை சங்கத்தின் நிர்பந்தத்தினால் தான் இது போன்ற அவலம் ஏற்படுகிறது என்றும், முறையான ஊதியம் தராமல் அலைக்கழிக்கப்படுவதாகவும் கூறி அரசு அமரர் ஊர்தி வாகன ஓட்டுனர்கள் இன்று காலை கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இது குறித்து அமரர் ஊர்தி ஓட்டுனர் சுரேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கோவையில் 10 அமரர் ஊர்திகள் உள்ளன. ஆனால், 2 மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அதிக அளவில் பிரேதங்கள் வரும்போது அவற்றை மொத்தமாக அரசு வாகனத்தில் ஏற்றி அனுப்புகின்றனர். இதனால், ஓட்டுனர்களுக்கும் பிரேதத்தின் உறவினர்களுக்கும் இடையே பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பலமுறை அவர்களால் ஓட்டுனர்கள் தாக்கப்படுகின்றனர்.

அதோடு, 525 ரூபாய் ஊதியம் தருவதாக கூறிவிட்டு தற்போது வெறும் 215 ரூபாய் மட்டுமே ஊதியமாக கொடுக்கின்றனர். பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டு வரும் செஞ்சிலுவை சங்க நிர்வாகம் ஓட்டுனர்களின் உழைப்பை திருடுகின்றது. இதைத்தடுக்க வலியுறுத்தியே ஆர்ப்பாட்டம் நடத்தினோம். உடனடியாக மாவட்ட நிர்வாகம் எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் என எதிர்ப்பார்த்திருக்கிறோம்.



இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...