வங்கிகளின் ஜப்தி நடவடிக்கையை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கோவை, நவம்பர் 14

விவசாயிகள் மீது வங்கிகள் நடத்தும் ஜப்தி நடவடிக்கையை கண்டித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பாக சூலூர் பேருந்து நிலையம் எதிரில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



விவசாய சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர், திரு. பாபு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் கோவை மற்றும் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு, வங்கிகளுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

இதுபற்றி திரு. பாபு கூறியதாவது, ‘விவசாயிகள் மீது வங்கிகள் நடத்தும் அராஜக ஜப்தி நடவடிக்கைகளை வன்மையாக கண்டித்து அனைத்து விவசாயிகளின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. மேலும், பால் விலையை உயர்த்தக் கோரியும், ஜப்தி நடவடிக்கையில் உயிர் இழந்த விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும் இந்த ஆர்பாட்டத்தின் மூலமாக வலியுறுத்துகின்றோம்’ என்றார்.

இந்த ஆர்பாட்டத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகளும், ஏர்முனை இளைஞர் அணியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...