பள்ளியில் தமிழில் பேசிய மாணவிக்கு அபராதம்

கோவை, நவம்பர் 14: கோவை அருகே தனியார் பள்ளியில் சக மாணவிகளிடம் தமிழில் பேசியதற்காக அபராதம் விதித்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 9-ம் வகுப்பு மாணவி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை அடுத்த போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் இன்று சமூக ஆர்வலர் மரீனா-வுடன் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

இதுகுறித்து மாணவி கூறுகையில், செட்டிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறேன். தான் படிக்கும் பள்ளியில் போதுமான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. பள்ளியில் சேரும் கழிவுநீரையும் கற்களையும் மாணவ, மாணவிகளைக் கொண்டே அகற்றுகின்றனர். 

மேலும் பள்ளியில் சிறு குழந்தைகளுடன் தமிழில் பேசியதற்காக அபராதம் விதிக்கின்றனர். கடந்த வாரம் நான் தமிழில் பேசியதற்காக அபராதம் விதித்ததால் பேருந்தில் வர முடியாமல் நடந்தே வீட்டிற்கு வந்தடைந்தேன். 

பள்ளி நிர்வாகத்தின் இதுபோன்ற நடவடிக்கைகள் குறித்தும், எதற்கெடுத்தாலும் அபராதம் விதிப்பது குறித்தும் பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினால் பெற்றோரை தரக்குறைவாக பேசுகின்றனர். மகள் மனவேதனை அடைந்ததால் வேறு வழியில்லாமல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்துள்ளோம். தனது மகளை போலவே பாதிக்கப்பட்ட மாணவிகள் வீட்டில் சொல்லக்கூட பயந்து கொண்டு சொல்லாமல் உள்ளனர் என்றார் மாணவியின் தந்தை.

மாணவியின் குடும்பம் தனக்கு அறிமுகமானவர்கள் என்பதால் தன்னை தொடர்பு கொண்டு பள்ளியில் நடக்கும் அவலங்கள் குறித்து தெரிவித்தனர். இதனையடுத்தே அவர்களை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க அழைத்து வந்தேன் என்றார் சமூக ஆர்வலர் மரீனா.

குறிப்பாக பள்ளியில் விளையாட்டுத் துறை ஆசிரியர் கார்த்திக், மாணவிகளிடம் அத்துமீறி நடத்து கொள்கிறார். கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்ளப் போவதாக பாதிக்கப்பட்ட மாணவி தன்னிடம் தெரிவித்ததால் ஆட்சியரிடம் புகார் அளிக்க அவர்களை அழைத்து வந்துள்ளேன். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...