உயர்கல்விக்கான விருது பெற விண்ணப்பிக்க நாளைக் கடைசிநாள்

கோவை, நவம்பர் 14 

தமிழகக் கலை அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரிகளின் கழகம் சார்பில் உயர்கல்வியில் சிறந்து விளங்கியவர்களுக்கான விருதைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க நாளைக் கடைசி நாளாகும். 

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் உயர்கல்வியில் சிறந்து விளங்கியவர்களுக்கு தமிழகக் கலை அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரிகளின் கழகத்தின் சார்பில் விருது வழங்கிக் கவுரவிக்கப்படுகிறது. உயர்கல்வியில் பெரும் பங்களிப்பை அளித்தவர்கள், சிறந்து விளங்கியவர்கள், சிறந்த ஆசிரியர்கள், சிறந்த தலைமையாசிரியர் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. 

வரும் 25-ம் தேதி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள ஐடிசி வெல்கம் ஓட்டலில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் இந்த விருது வழங்கப்படுகின்றது. தகுதியானவர்கள் விருதுகளுக்கு விண்ணப்பிக்க நாளைக் கடைசி நாளாகும். 

இதைத் தொடர்ந்து, அன்றைய தினம் மாநில அளவிலான கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் உயர்கல்வித்துறையில் உள்ள சவால்களை எதிர்கொள்வது குறித்து இந்தக் கருத்தரங்கில் எடுத்துரைக்கப்படுகிறது. இதில், கலந்து கொள்ள விரும்புபவர்கள் வரும் 22-ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...