உடுமலை சங்கர் கொலை வழக்கு - டிச.,12-ம் தேதிக்குத் தீர்ப்பு ஒத்திவைப்பு

நவம்பர் 14 

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கலப்புத்திருமணம் செய்து கொண்ட வாலிபர் சங்கர் கொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை டிசம்பர் 12-ம் தேதிக்கு திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

உடுமலை அருகே உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்த வேலுசாமி என்பவரது மகன் சங்கர்(22) தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த ஆண்டு சக கல்லூரி மாணவி கவுசல்யா (19) என்பவரைக் காதலித்து, கலப்புத் திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி உடுமலைப் பேருந்து நிலையத்தில் வைத்து சங்கர் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டார். காயத்துடன் உயிர்தப்பிய கவுசல்யா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வீடு திரும்பினார். 

இந்தக் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த உடுமலை போலீசார், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, மாமன் பாண்டித்துரை, மற்றும் செல்வகுமார், மதன், ஜெகதீசன், மணிகண்டன், கலை தமிழ்வாணன், மற்றொரு மணிகண்டன், தன்ராஜ், பிரசாந்த் ஆகிய 11 பேரைக் கைது செய்தனர். இவர்கள் மீது கொலை வழக்கு, கூட்டுச்சதி, வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

கைதானவர்களில் கவுசல்யாவின் மாமா பாண்டித்துரை திருச்சி சிறையிலும், மற்ற 10 பேரும் கோவை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 11 பேர் மீதும் குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது. உடுமலை சங்கர் கொலை வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அலமேலு நடராஜ் முன்னிலையில் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக 1,500-க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. 

கடந்த ஓராண்டாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைகள் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், கொலை வழக்கில் கைதான 11 பேரும் இன்று திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதேபோல, நீலகிரி மாவட்டம் குன்னூரில் பணியாற்றி வரும் கவுசல்யாவும் இன்று திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அலமேலு நடராஜ், அடுத்த மாதம் 12-ந்தேதி தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...