கோவைக்கு புதிய காவல் ஆணையர்

கோவை, நவம்பர் 14

திரு. கே. பெரியய்யா, கோவை காவல் ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  கோவை காவல் ஆணையர் அமல்ராஜ், திருச்சி  காவல் ஆணையராக  மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

கோவை, சென்னை, திருச்சி உள்ளிட்ட 7 மாவட்ட ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கோவை காவல் ஆணையராக இருந்த திரு. அமல்ராஜ், திருச்சி மாவட்ட காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். சென்னை மாவட்ட கூடுதல் ஆணையர் திரு. கே. பெரியய்யா, கோவை காவல் ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  

இதேபோல, திருச்சி காவல் ஆணையர் திரு. ஏ. அருண் சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையராகவும்,  காவல்துறை பொது விநியோக துறையில் ஐ.ஜி.,யாக இருந்த வெங்கட்ராமன் நிர்வாகத்துறை ஐ.ஜி.,யாகவும், நிர்வாக பிரிவில் ஐ.ஜி.,யாக இருந்த தினகரன் ஸ்தாபன ஐ.ஜி.,யாகவும், சென்னை பயிற்சி கல்லூரி ஐ.ஜி.,யாக சோனல்மிஸ்ரா, அமலாக்கத்துறை கண்காணிப்பாளராக அமானத் மாற்றப்பட்டுள்ளனர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...