அமைச்சர்கள் மீது லஞ்சம், ஊழல் புகார்கள் இருப்பதை உணர முடிகிறது - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

கோவை, நவம்பர் 15

தமிழக அமைச்சர்கள் மீது லஞ்ச ஊழல் புகார்கள் இருப்பதை பாஜகவினால் உணர முடிகிறது என அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை காந்திபுரம் அருகே திருவள்ளுவர் நகர் பகுதியில் பழுதடைந்த சாலையினை சீரமைக்கும் போராட்டத்தில் பாஜகவினர் ஈடுபட்டனர். பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில், அக்கட்சியினர் சிமெண்ட் கலவையை கொண்டு சாலையை சரி செய்தனர். 



அப்போது, வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவையில் சாலை பாரமரிப்பு பணிகளில் மாநகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தவில்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. மக்களின் அடிப்படை பிரச்சனைகளான சாலை வசதி, குடிநீர் பிரச்சணைகளில் தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். 

ஸ்மார்ட் சிட்டி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு ஒதுக்கும் நிதி முறையாக பயன்படுத்தப்படுவதில்லை. தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நிறைந்து இருக்கிறது. மேலும், தமிழக அமைச்சர்கள் மீது லஞ்ச, ஊழல் புகார்கள் இருப்பதை பாஜகவினால் உணர முடிகிறது. ஊழலால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...