டிச.,16-ல் காங்கிரஸ் கட்சித் தலைவருக்கான தேர்தல் - ராகுல் காந்தியைத் தேர்வு செய்யத் தீர்மானம் நிறைவேற்றம்

நவம்பர் 20: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல், வரும் டிசம்பர் 16ம் தேதி நடக்கும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதில், கட்சியின் தற்போதைய துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைவராக தேர்ந்தேடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்க படுகிறது. 

கடந்த 1998ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா இருந்து வருகிறார். சுமார் 19 ஆண்டுகள் அவரே தலைவர் பதவியில் இருப்பதாலும், அவரது உடல்நிலை கருதியும் புதிய தலைவரை தேர்வு செய்ய காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதனால் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலை எப்போது நடத்தலாம் என்பது குறித்து ஆலோசிப்பதற்காக அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் சோனியா தலைமையில் இன்று நடந்தது. 

கூட்டத்திற்குப் பிறகு கட்சி தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் டிசம்பர் 1-ம் தேதி துவங்கி, டிசம்பர் 4-ம் தேதி வரை நடக்கும். டிசம்பர் 16-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். டிசம்பர் 19-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, புதிய தலைவர் யார் என்பது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதே சமயம், கட்சியின் புதிய தலைவராக ராகுல் காந்தியை தேர்வு செய்வது தொடர்பான தீர்மானம் இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒருவேளை இந்தத் தேர்தலில் ராகுலை தவிர வேறும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்றால், வேட்புமனு தாக்கலில் கடைசி நாளில் ராகுலை கட்சியின் தலைவராக முறைப்படி அறிவிக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி அறிவிக்கப்பட்டாலும், குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகே கட்சியின் தலைமை பொறுப்பை அவர் ஏற்பார் எனவும், அதுவரை கட்சி தலைவராக சோனியாவே தொடர்வார் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . ஒருவேளைத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு எதிராக அமைந்தால், அடுத்தகட்ட முடிவு குறித்து பின்னர் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...