அரசு வேலை வழங்க வலியுறுத்தி சோமனூர் பேருந்து நிலைய விபத்தில் உயிரிழந்த நடத்துநர் மனைவி கோரிக்கை

கோவை, நவம்பர் 20: அரசு வேலை வழங்க வலியுறுத்தி சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த பேருந்து நடத்துநர் சிவக்குமாரின் மனைவி இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

கோவை, சோமனூர் பேருந்து நிலையத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதியன்று மேற்கூரை இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் அரசு பேருந்து நடத்துநர் சிவக்குமாரும் ஒருவர்.

இவரது உயிரிழப்பிற்கு தமிழக அரசு சார்பில் 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், சிவக்குமாரின் மனைவி சௌந்தரி இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் கைக்குழந்தையுடன் வந்து மனு அளித்தார். அதில், கணவரை இழந்து 6 மாத கைக்குழந்தையுடன் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வருவதாகவும், தனக்கு அரசு வேலை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.



Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...