ரூ. 33 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மகளிர் சுய உதவிக் குழுவினர் மனு

கோவை, நவம்பர் 20: கோவையில் நிலம் வாங்கித் தருவதாக ரூ. 33 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட மகளிர் சுய உதவி குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவர் மகளிர் சுய உதவிக் குழு நடத்தி வருகிறார். கடந்த 2011-ம் ஆண்டு கந்தன் கார்டன் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வரும் அழகர்சாமி என்பவர், மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ளவர்களுக்கு ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி பகுதியில் நிலம் வாங்கித் தருவதாகவும், மாதத் தவணையில் பணம் செலுத்தலாம் எனவும் கூறியுள்ளார். அழகர்சாமி உறுதியளித்தன் பேரில் லட்சுமியின் சுய உதவிக் குழுக்களில் இருந்தவர்கள் மாதத் தவணையின் அடிப்படையில் பணம் செலுத்தி முடித்துள்ளனர். இருப்பினும், பல ஆண்டுகளாகியும் அவர்களுக்கான நிலம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நிலத்தை அளிக்காமல் ரூ. 33 லட்சம் மோசடி செய்ததாக, லட்சுமி கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். மேலும், தலைமறைவாக இருந்து வரும் அழகர்சாமிக்குக் காவல்துறையினர் சாதகமாகச் செயல்படுவதாகவும், மோசடியில் ஈடுபட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...