ரயில்வே மேம்பாலத்தில் சப்-வே அமைக்காததைக் கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக பொதுமக்கள் அறிவிப்பு

கோவை, நவம்பர் 20: ரயில்வே மேம்பாலத்தில் சப்-வே அமைக்காத சேலம் ரயில்வே கோட்டத்தைக் கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்போவதாக பீளமேடு பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பீளமேடு கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு, குடியிருப்பு சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், பீளமேடு ரயில்வே மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடை பெற்றுவந்தன . 2011-ஆம் ஆண்டு ரயில்வே போராட்டக் குழு அமைக்கப்பட்டு பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தமிழக அரசு சார்பில் ரூ. 30.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு தற்போது ரயில்வே மேம்பால பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன . 

இதனிடையே, 2011-ம் ஆண்டு சேலம் ரயில்வே கோட்டம் காண்பித்த வரைபடத்தில் சப்-வே இடம் பெறும் என குறிப்பிட்டிருந்தது. ஆனால், அதற்கான பணிகள் துவக்கப்படாததால் குடியிருப்பு சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், தற்போது வரை அதற்கான பணிகள் துவங்கப்படாமல் உள்ளது.

எனவே, ரயில்வே மேம்பாலத்தில் சப்-வே அமைக்காத சேலம் ரயில்வே கோட்டத்தைக் கண்டித்து வரும் 28-ம் தேதியன்று வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...