உதவித் தொகைக் கோரி எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டவர்கள் கைக்குழந்தையுடன் மனு


கோவை, நவம்பர் 20: அரசின் உதவித்தொகையை வழங்கக்கோரி எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட தம்பதியினர் கைக்குழந்தையுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வ குபேந்திரன். எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட இவர், கோபியைச் சேர்ந்த அமுதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது 45 நாட்களே ஆன கைக்குழந்தை உள்ளது. இந்த நிலையில், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய அரசின் உதவித் தொகையை வழங்கக் கோரி கைக்குழந்தையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். 

கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக பால்வினை நோய்க்கு மருந்துகள் எடுத்து வருவதாக கூறிய அவர்கள், அரசு வழங்கும் உதவித்தொகைக் கேட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பலமுறை மனு அளித்தும் எவ்வித உதவித்தொகையும் கிடைக்கவில்லை என தெரிவித்தனர். எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ வேண்டும் என்ற நம்பிக்கை தரும் அரசு, அதற்கான உதவி தொகையை அளிக்காமல் இழுத்தடிப்பதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி இருப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர். 

மேலும், தமிழக அரசால் வழங்கப்படும் பிரசவகால உதவித் தொகையும் இதுவரை வழங்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டிய தம்பதியினர், அரசு தங்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு விரைவாக உதவித் தொகைக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...