இந்திய ஜவுளி உரிமையாளர்களின் கூட்டமைப்பு சார்பில் கோவையில் வரும் 27-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

கோவை, நவம்பர் 22

பிரதம மந்திரி கவுசல் விகாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் 43 நாட்கள் திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. மத்திய தொழில்முனைவோர் மற்றும் மேம்பாட்டுத்துறையின் (எம்.எஸ்.டி.இ) சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுச் செயல்பட்டு வரும் இந்தப் பயிற்சி வகுப்பிற்குக் குறைந்தபட்சம் 5-வது படித்திருந்தால் போதுமானது. தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி, இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, வேலைவாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்படுகிறது.

நாட்டில் உள்ள மிகப்பெரிய ஜவுளித் தொழில் சங்கங்களில் இந்திய ஜவுளி உரிமையாளர்களின் கூட்டமைப்பு முக்கியமானதாகும். இந்த அமைப்பானது, ஜவுளித்துறையில் பல்வேறு விதமான தொழில் போட்டிகளை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், கோவை மாவட்டம் அவினாசி சாலையில் உள்ள சித்ரா பகுதியில் வரும் 27-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. பிரதம மந்திரி கவுசல் விகாஷ் யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்கள், தமிழகம் முழுவதும் உள்ள இந்திய ஜவுளி உரிமையாளர்களின் கூட்டமைப்பு உறுப்பினர்களின் நிறுவனங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளாக ஜவுளித் தொழில்துறையில் ஆள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனைப் போக்கும் நடவடிக்கையாக, இந்திய ஜவுளி உரிமையாளர்களின் கூட்டமைப்பு மற்றும் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்துக்கு இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, முன் அனுபவமில்லாத 50,000 பேருக்கு, இந்திய ஜவுளி உரிமையாளர்களின் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு இந்த ஒப்பந்தத்தின்கீழ் 16,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...