மலையாள நடிகை கடத்தப்பட்ட வழக்கு : நீதிமன்றத்தில் துணைக் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது போலீஸ்

நவம்பர் 22

மலையாள நடிகை கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட வழக்கில்  அங்கமாலி நீதிமன்றத்தில் துணைக் குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். 

கேரளாவில் கடந்த பிப்ரவரி 17-ந்தேதி நடிகை பாலியல் சித்ரவதை செய்யப்பட்ட வழக்கில் பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் 85 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த நிலையில், அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.  இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் 18-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட முதல் குற்றபத்திரிகையில் திலீப் 11-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டடிருந்தார்.  முதல் குற்றவாளியாக சுனில் என்கிற பல்சர் சுனில் இருந்தார். 

இந்த நிலையில், நடிகை கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட வழக்கில் துணைக் குற்றப்பத்திரிகையை இன்று அங்கமாலி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீஸார் தாக்கல் செய்துள்ளனர். இதில் நடிகர் திலீப் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், திலீப்பின்   முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டு உள்ளார். இந்தக் குற்றப்பத்திரிகையில் திலீப் உள்பட 14 குற்றவாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். 385 சாட்சிகள் மற்றும் 12 ரகசிய அறிக்கைகள் சேர்க்கப்பட்டு உள்ளன. 50 சினிமா உலக பிரமுகர்கள் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இந்த வழக்கில் பல்சர் சுனில், விஜேஷ், மணிகண்டன், வடிவாள் சலீம், மார்ட்டீன், பிரதீப், சார்லி ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...