கந்துவட்டி பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் - நடிகர் பிரகாஷ்ராஜ் வலியுறுத்தல்

கோவை, நவம்பர் 23:

கந்துவட்டி பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என நடிகர் பிரகாஷ்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டது வேதனையளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது. இச்சம்பவம் தமிழ் திரையுலகின் நிலைமையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. கந்து வட்டியினால் ஏராளமான தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கந்துவட்டி பிரச்சனைக்கு தீர்வுகாண அரசு தலையிட வேண்டும். கந்துவட்டி உள்ளிட்ட பிரச்சனைகளை தயாரிப்பாளர்கள் சங்கம் மூலமாக பேசி தீர்வு காண நடவடிக்கை எடுப்போம். என்றார். 

தொடர்ந்து, பத்மாவதி திரைப்படம் தொடர்பாக நடிகை தீபிகா படுகோனேவின் தலைக்கு விலை நிர்ணயிப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், எவ்வளவு மோசமான நாட்டில் வாழ்கிறோம் என்பதை இது எடுத்துக்காட்டுவதாக உள்ளது. பல மொழி, கலாச்சாரம் உள்ள ஜனநாயக நாட்டில் ஆளும் கட்சியினரே மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம். நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் மாற்றம் வேண்டுமென அரசியலுக்கு வருவது தவறல்ல. நடிகர் கமல்ஹாசன் ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாமே தவிர, குற்றச்சாட்டே கூறக்கூடாது என மிரட்டக்கூடாது. நான் அரசியலுக்கு வரமாட்டேன். குடிமகனாக வாழவே ஆசைப்படுகிறேன். இவ்வாறு பிரகாஷ்ராஜ் தெரிவித்தார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...