கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தொடர்ந்து செயல்படும்

கோவை, நவம்பர் 23

கோவையில் செயல்பட்டு வரும் மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தொடர்ந்து செயல்படும் எனவும்,  வதந்திகளை பொதுமக்கள் நம்பவேண்டாம் எனவும் மண்டல பொறுப்பு அலுவலர் திரு. கே. தங்கம் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம், உப்பிலிபாளையத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்ட மக்களுக்காக மண்டல பாஸ்போர்ட் அலுவலகமும், அவிநாசி சாலை, சிட்ரா அருகில் பாஸ்போர்ட் சேவை மையமும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், மண்டல அலுவலகத்தை சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்துடன் இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகின. சில ஊடகங்கள் வாயிலாகச் செய்திகளும் வெளியிடப்பட்டன.

மலப்புரம் மண்டல அலுவலகம், கோழிக்கோடு மண்டல அலுவலகத்துடன் அண்மையில் இணைக்கப்பட்டதைப் போலவே தமிழகத்தில் கோவை மண்டலத்தை சென்னையுடனும், திருச்சி மண்டலத்தை மதுரையுடனும் இணைப்பதற்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் முயற்சி செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில், கோவை மண்டல அலுவலகம் சார்பில் அதன் பொறுப்பு அலுவலர் கே.தங்கம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தை சென்னை அலுவலகத்துடன் இணைப்பது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே கோவையில் பாஸ்போர்ட் மண்டல அலுவலகம், சேவை மையம் ஆகியவை தொடர்ந்து செயல்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...