ஆட்டிப்படைக்கும் கந்துவட்டிக் கொடுமையை தடுத்தாக வேண்டும் - நடிகர் கமல்ஹாசன்

நவம்பர் 23

விவசாயிகள் முதல் சினிமாக்காரர்கள் வரை ஆட்டிப்படைக்கும் கந்து வட்டிக் கொடுமையை தடுத்தாக வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

கந்துவட்டிக் கொடுமையால் நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், தயாரிப்பாளருமான அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்பிற்கு பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்தனர். ஆனால், அண்மைக்காலமாக சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வரும் நடிகர் கமல்ஹாசன் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தார். இதனை பலர் விமர்சனம் செய்ததுடன், சினிமாத்துறையில் நிலவி வரும் கந்துவட்டிக் கொடுமை குறித்து கமல் மவுனம் காப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பினர். 

இந்த நிலையில், அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளதற்கு நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள டுவிட்டில், கந்துவட்டிக் கொடுமை ஏழை விவசாயி முதல் பணக்காரர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர் வரை ஆட்டிப்படைப்பதை சட்டமும், சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும். அசோக்குமாரின் அகாலமரணம் போல் இனி நிகழவிடக்கூடாது. குடும்பத்தார்க்கும், நட்புக்கும் கலைத்துறையின் அனுதாபங்கள். என குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...