தேர்வுகள் எழுதும் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ சான்று பெற சிறப்பு ஏற்பாடுகள்- ஆட்சியர் தகவல்

கோவை, நவம்பர் 23

தேர்வுகள் எழுதும் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ சான்று பெற சிறப்பு மருத்துவக் குழு கோவை இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலக வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் திரு. த.ந. ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாற்றுத் திறனாளிகள் தேர்வு எழுதுவதற்காக கால அவகாசம், ஒரு சில பாடங்களுக்கு விலக்கு அளித்தல் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு பதில் வேறு ஒருவர் தேர்வு எழுத அனுமதித்தல் போன்ற பல சலுகைகள் உள்ளன. உரிய மருத்துவரிடம் மருத்துவச் சான்று பெற்ற பின்னரே அத்தகைய சலுகைகளை வழங்க இயலும். தேர்வு காலங்களில் மேற்படி மருத்துவ சான்றை மாற்றுத் திறனாளிகள் எளிமையாக பெற்றிட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வருகின்ற 2017 நவம்பர் 29-ம் தேதியன்று காலை முற்பகலில் கோவை இணை இயக்குநர் நலப்பணிகள் எம்.சந்திரசேகரன் மேற்பார்வையில் சிறப்பு மருத்துவக் குழு கோவை இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.

இதில், மருத்துவ சான்று கோரும் அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களை மருத்துவர் பரிசோதித்து வழங்கும் சான்றிதழ்களை பெற்றுப் பயனடையலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...