நீதிபதியைக் கண்டித்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம்

கோவை, நவம்பர் 23

கோவை 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராஜவேலைக் கண்டித்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 40-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இதில் 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரும் ராஜவேல் வழக்கறிஞர்களுடன் மோதல் போக்கினை கடைப்பிடித்து வருவதாகக் கூறப்படுகின்றது. இது தொடர்பாக வழக்கறிஞர்கள் சங்கத்தில் முறையீடும் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீதிபதியின் இத்தகைய நடவடிக்கையினைக் கண்டித்து இன்று நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அனைத்து நீதிமன்றங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மீது நடவடிக்கை எடுக்கும் வரை அந்த ஒரு நீதிமன்றத்தை மட்டும் காலவரையின்றி புறக்கணிப்பது எனவும் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். இதனால் 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...