ஆர்கே நகருக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் - இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு


நவம்பர் 24 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, காலியாக உள்ள ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவால், சென்னை, ஆர்கே நகர் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அந்தத் தொகுதிக்கு, ஏப்ரலில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரால், தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து ஆர்கே நகர் இடைத்தேர்தல் குறித்த வழக்கில், டிசம்பர் 31-ம் தேதிக்குள் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், ஆர்.கே நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பக்கே கஸாங் மற்றும் லிகபல்லி, உத்தரபிரதேசத்தில் உள்ள சிகந்த்ரா, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சபாங் உள்ளிட்ட காலியானத் தொகுதிகளுக்கும் அதே நாளில் இடைத்தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்கண்ட 5 தொகுதிகளில் நடக்கும் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நவம்பர் 27-ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் டிசம்பர் 4-ம் தேதி ஆகும். டிசம்பர் 5-ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்புமனுக்களைத் திரும்ப பெற டிசம்பர் 7-ம் தேதி கடைசி நாளாகும். வாக்குகள் டிசம்பர் 24-ம் தேதி எண்ணப்படுகின்றன.

இந்த இடைத்தேர்தலின் போது யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் ஒப்புகை சீட்டுடன் கூடிய இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...