வாகன தணிக்கையின் போது நடந்த விபத்தில் காவலர் பலி

கோவை, நவம்பர்.24

கோவையில் வாகனத் தணிக்கையின் போது கார் மோதிய விபத்தில் காவலர் பலியானார்.

ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார் (31). 

தமிழ்நாடு சிறப்பு காவல் படை 4-வது பட்டாலியனில் காவலராக பணியாற்றி வந்தார். 

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. 

கடந்த 15-ம் தேதி இரவு வேலந்தாவளம் சோதனைச்சாவடி அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். 

அப்போது அவ்வழியே வந்த கார் ஒன்றை நிறுத்த முயன்ற செந்தில் குமார் மீது எதிர்பாராத விதமாக கார் மோதி விபத்து ஏற்பட்டது.  அவரை மீட்ட சக காவலர்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் நேற்று பரிதாபமாக பலியானார்.  இது தொடர்பாக் கே.ஜி.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

வாகனத் தணிக்கையின் போது காவலர் ஒருவர் பலியான சம்பவம் சக காவலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...