குலுக்கல் முறையில் பரிசுகள் அறிவித்து ஏமாற்றும் நிறுவனங்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

கோவை, நவம்பர் 24

மக்களை ஏமாற்றும் நோக்குடன் திருவிழா காலங்களில் பரிசுக் குலுக்கல் அறிவிக்கும் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் திரு. டி.என்.ஹரிஹரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

கோவை மாவட்டத்தில் தீபாவளி, கிருஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட திருவிழா காலங்களில் வணிக நிறுவனங்கள் தங்களின் சுய இலாபத்திற்காக பரிசுக் குலுக்கல் என்ற திட்டத்தின் மூலம் அவர்கள் விற்பனை செய்யும் பொருட்களின் விலையைக் கூட்டி தரமற்ற பொருட்களை விற்பதாகவும், அளவு குறைப்பு, கலப்படப் பொருட்கள், பழைய இருப்பு பொருட்கள் விற்பனை செய்து வருவதாகப் புகார்கள் வருகின்றன. வணிகர்களின் இத்தகைய செயல்களினால் நுகர்வோர்கள் ஏமாற்றப்படுகின்றனர். 

பொதுமக்களும், நுகர்வோர்களும் இதுபோன்று பரிசுக் குலுக்கல் திட்டத்தினை அறிவிக்கும் வணிக நிறுவனங்களின் விளம்பரங்களைத் தவிர்க்க வேண்டும்.

மேலும், பொதுமக்களை ஏமாற்றும் நோக்குடன் இதுபோன்று பரிசுக் குலுக்கல் திட்டங்களை அறிவித்து விளம்பரங்களை வெளியிடும் வணிக நிறுவனங்கள் மீது பரிசு குலுக்கல் (தடை) சட்டம் 1955, பரிசு கொண்ட சீட்டுத் திட்டங்கள் மற்றும் பண சுழற்சித் திட்டங்கள் (தடை) சட்டம் 1978 மற்றும் தமிழ்நாடு பரிசுத் திட்டங்கள் (தடை) சட்டம் 1979 ஆகியவற்றின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...