பழங்கால சிலைகளை பதுக்கியதாக மூன்று பேர் கைது

கோவை, நவம்பர்.24

கோவையில் பழங்கால சிலைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக மூன்று நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

பீளமேட்டை அடுத்த பிருந்தாவன் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பழங்கால சிலைகள் மற்றும் அரிய பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பீளமேடு போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  தகவலின் பேரில் நேற்று இரவு அந்த வீட்டிற்கு சென்ற போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கு இருந்த ஐம்பொன் சிலைகளான சரஸ்வதி, நாகதேவி சிலைகளைக் பறிமுதல் செய்தனர். 



மேலும், செம்பு வளையல்கள், செம்பு பாத்திரங்கள் மற்றும் 2 சங்கு உள்ளிட்ட பொருள்கள் வைக்கப்பட்டிருந்த 2 சூட்கேஸ்களையும் மீட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக, பீளமேடு  பகுதியைச் சேர்ந்த பசந்திரசேகரன் (48),பாலக்காடு மாவட்டம் வடக்காஞ்சேரியைச் சேர்ந்த பாலச்சந்திரன் (34) மற்றும் இடையர்பாளையம் சீனிவாசநகரைச் சேர்ந்த ஜெயபாண்டியன் (39) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

 

போலீசார் நடத்திய விசாரணையில் கைதான மூன்று பேரும் சிலைகள் மற்றும் பாரம்பரிய பொருட்கள் அனைத்தும் தங்கள் முன்னோர்கள் பயன்படுத்தியதாகவும், அவற்றை பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து, கைதான மூன்று பேரையும் கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் அழைத்துச்சென்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...