ஆதிதிராவிடர்களுக்கான தாட்கோ திட்டங்களில் பயன்பெறுவோரின் ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை, நவம்பர் 24 

தாட்கோ திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் ஆதிதிராவிட இனத்தவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நிலம் வாங்கும் திட்டம், நிலம் மேம்படுத்துதல், துரித மின் இணைப்புத் திட்டம், தொழில்முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம், மருத்துவமனை அமைத்தல், மருத்துவ மையம், மருந்தியல், கண் கண்ணாடியகம், முடநீக்கு மையம், ரத்தப் பரிசோதனை நிலையம் அமைத்தல் மற்றும் மேம்படுத்துல், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான சுழல்நிதி மற்றும் பொருளாதார கடனுதவி உள்ளிட்ட திட்டங்களுக்கு வயது வரம்பு 18 முதல் 65 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

மேலும், மானியத் திட்டத் தொகையில் 50 %, மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதி திட்டம், மேலாண்மை இயக்குநரின் விருப்புரிமை நிதியதவி, இந்தியக் குடிமைப் பணி முதன்மை தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி, சட்டப்பட்டதாரிகளுக்கு நிதியுதவி, தமிழ்நாடு தேர்வாணைய தொகுதி -1 முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நிதியுதவி, பட்டயக்கணக்கர்/ செலவுக்கணக்கர்/ நிறுவன செயலர்களுக்கு நிதியுதவி போன்ற பல்வேறு திட்டங்களுக்கு குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.1 லட்சம் வரை உள்ளவர்களும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிக்க விரும்புவோர் http://application.tahdco.com என்ற இணையதள முகவரிக்குச் சென்று விண்ணப்பத்தினை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும்போது குடும்ப அட்டை எண் அல்லது இருப்பிடச் சான்று, சாதிச் சான்று, வருமானச் சான்று, கல்வித்தகுதி மற்றும் வயதிற்கான ஆதார சான்றிற்கு (பள்ளி மாற்றுச் சான்று/ வாக்காளர் அடையாள அட்டை/ ஓட்டுநர் உரிமம்/ பான் கார்டு/ ஆதார் அட்டை/ மதிப்பெண் சான்று) இவற்றில் ஏதாவது ஒன்றையும் மற்றும் திட்டத்திற்கான TIN எண் உள்ள நிறுவனத்திடமிருந்து பெற்ற விலைப்புள்ளி திட்ட அறிக்கை பெறப்பட்ட தேதி ஆகியவற்றை அதற்கான இடத்தில் குறிப்பிட்டு புகைப்படத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். 

நிலம் வாங்கும் திட்டத்திற்கு மூலப்பத்திரம், விற்பனை உடன்படிக்கை பத்திரம், வில்லங்க சான்று சர்வே எண், சிட்டா அடங்கல், நில பத்திரம் மற்றும் நிலம் விற்பவரது சாதி சான்று விபரங்களைப் பதிவு செய்து ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். 

தகுதி வாய்ந்த ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் மேற்குறிப்பிட்டுள்ள பல்வேறு திட்டங்கள் மூலம் பயனடைய மேற்குறிப்பிட்ட ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், விபரங்கள் பெற மாவட்ட மேலாளர், தாட்கோ, டாக்டர். பாலசுந்தரம் சாலை அலுவலகத்தை அணுகுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...