ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கு 9 பேர் கொண்ட பார்வையாளர்கள் குழு நியமனம்


நவம்பர் 26

ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்காக 9 பார்வையாளர்கள் கொண்ட குழுவை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அந்தக் குழு வரும் 4-ம் தேதி தமிழகம் வருகிறது.

ஆர்கே நகர் தொகுதியில் டிசம்பர் 21-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக இரட்டை இலை சின்னம் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அணியினர் கோரியிருந்தனர்.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அடங்கிய ஒருங்கிணைந்த அதிமுக அணிக்கு தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் வழங்கியது. எனவே, இந்த தேர்தலில் ஒருங்கிணைந்த அணி, அதிமுக என்ற பெயரில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறது. இதேபோல, டிடிவி தினகரன் மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். மேலும், திமுக உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிடுகின்றன. இதனால், ஆர்கே நகர் இடைத்தேர்தலில் கடும் போட்டி நடப்பதற்கு சூழல் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், பொது பார்வையாளர்கள், செலவினம், காவல் பார்வையாளர்கள் ஆகியோர் அடங்கிய 9 பேர் கொண்ட பார்வையாளர்கள் குழுவை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இந்தக் குழு வருகிற டிசம்பர் 4-ம் தேதி தமிழகம் வருகிறது. நாளை வேட்பு மனு தாக்கல் தொடங்கவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேட்பு மனுத் தாக்கல் முடிவடைந்த பின் பார்வையாளர்கள் தங்கள் பணிகளை தொடங்குவார்கள். தேவைக்கேற்ப வாக்குப்பதிவு நெருங்கும் தேதியில் கூடுதல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...