வீட்டு உபயோகப்பொருட்களில் வைத்து தங்கம் கடத்தல்: கோவை வந்த விமான பயணியிடம் 816 கிராம் தங்கம் பறிமுதல்


கோவை, நவம்பர் 26

வீட்டு உபயோகப்பொருட்களில் வைத்து தங்க கட்டிகளை கடத்தி வந்த வாலிபரிடம் இருந்து 816 கிராம் தங்க கட்டிகளை கோவை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சார்ஜாவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை 4:30 மணியளவில் ஏர் அரேபியா வந்த விமானத்தில் தங்க கட்டிகள் கடத்தப்பட்டுள்ளதாக கோவை சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில், விமானத்தின் மூலம் கோவை வந்தடைந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பயணிகளின் உடமைகளை அங்கு உள்ள ஸ்கேன் கருவி மூலம் சோதித்ததில் ஒருவரின் பையில் தங்கக்கட்டிகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.



இதையடுத்து அந்த பையை அதிகாரிகள் சோதனையிட்டபோது பல்வேறு வகையான கத்திகளினுள் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக, அந்த பயணியிடம் விசாரித்ததில் அவர், கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த அப்தாப் (37) என்பது, சார்ஜாவில் இருந்து தங்க கட்டிகளை சட்ட விரோதமாக எடுத்து வந்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து, அவரிடம் இருந்த 816 கிராம் எடையுள்ள தங்க கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அப்தாப்-ஐ கைது செய்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...