"ரகுவை கொன்றது யார்?": அழிக்கப்பட்டது சாலையில் எழுதப்பட்ட வாசகம்

கோவை, நவம்பர் 27

சாலை விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவத்தில் சாலையில் எழுதப்பட்ட "WHO KILLED RAGU?" என்ற வாசகம் அழிக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக கோவையில் வைக்கப்பட்ட அலங்கார நுழைவு வாயிலால் கோவை சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்த ரகுபதி (32) என்ற வாலிபர் பலியானதாக தகவல் வெளியாகியது. 

இச்சம்பவத்தை தொடர்ந்து, விபத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 

டிப்பர் லாரி மோதியதே வாலிபர் மரணத்திற்கு காரணம் என்றும், லாரி ஓட்டுனர் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் விளக்கம் அளித்தனர்.

இந்த சூழலில், நேற்று நள்ளிரவு ரகுபதி உயிரிழந்த இடத்தில் சில நபர்கள் "WHO KILLED RAGU?" (ரகுவை கொன்றது யார்?) என்ற வாசகத்தை எழுதியதோடு, அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க. பேனர்களையும் கிழித்து சென்றனர். 

சாலையில் எழுதப்பட்ட வாசகம் தமிழக அளவில் வைரலாகி சமூக வலைதளங்களில் விவாதத்திற்குள்ளானது. 

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, லாரி மோதிய விபத்தினாலேயே வாலிபர் உயிரிழந்ததாகவும், தி.மு.க.வினர் திட்டமிட்டு வதந்தி பரப்புவதாகவும் தெரிவித்தார். 

இந்த நிலையில், சாலை எழுதப்பட்ட வாசகத்தை இன்று அதிகாலை மாநகராட்சி அதிகாரிகள் கருப்பு நிற தாரை ஊற்றியும், மணலை போட்டும் அழித்தனர்.



Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...