கார்ப்பரேட் நிறுவன ஆட்டோக்களுக்கு கட்டண கட்டுப்பாடு விதிக்காததை கண்டித்து ஆட்டோ தொழிற்சங்கங்கள் சார்பில் மனு


கோவை, நவம்பர் 27

அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களும் வருகின்ற 2018 ஜனவரி 1 ஆம் தேதிமுதல் மினிமம் ரூபாய் 30 கி.மீ 15 ரூபாய் கட்டணத்தை மீட்டர் கட்டண அட்டையை காட்டி வசூல் செய்வது என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் போக்குவரத்து துணை ஆணையர் பத்திரிக்கையில் கொடுத்த அறிக்கையின்படி தன்னிச்சையாக கட்டணம் முடிவு செய்து அறிவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 



அரசு கட்டணம் நிர்ணயம் செய்யாமல், மீட்டர் போட்டு ஓட்டும் ஆட்டோ டிரைவர்களையும் அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும் ஆணையாளரின் நடவடிக்கை நியாயமானதல்ல என தெரிவித்தனர்.

மேலும், கார்ப்பரேட் கம்பெனிகளான ஓலா,ஜீகுனு போன்றவை தன்னிச்சையாக முடிவு எடுத்து அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்ட வசூலிக்கின்றனர். கார்ப்பரேட் கம்பெனிகளிடம் ஆதாயம் பெருவதால்தான் துணை ஆணயாளர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவதாக குற்றம் சாட்டினர். தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள மீட்டர் கட்டணத்தை தமிழக அரசு அமுல்படுத்தவும், கார்ப்பரேட் நிறுவனங்களின் அதிக கட்டண வசூலை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டியும் அனைத்து ஆட்டோ தொழிற்சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தனர்.



Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...