இரட்டை இலை விவகாரம்: ஓபிஎஸ், இபிஎஸ் சார்பில் கேவியட் மனுத் தாக்கல்

நவம்பர் 27

இரட்டை இலை விவகாரத்தில் தங்கள் தரப்பு கருத்தை கேட்காமல் எந்தவித உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என வலியுறுத்தி தில்லி உயர்நீதிமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

இரட்டை இலைச் சின்னம் மற்றும் கட்சியின் பெயரைப் பயன்படுத்திக் கொள்ளும் உரிமையையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு வழங்குவதாக தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது. இதனால், தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்ய உள்ளதாக தினகரன் கூறியிருந்தார்.

இதனையடுத்து, இரட்டை இலை சின்னத்திற்கு தடை கோரி தினகரனோ அல்லது வேறு யாரோ வழக்கு தொடர்ந்தால், இந்த விவகாரத்தில் தங்கள் தரப்பு கருத்தை கேட்காமல் உத்தரவு ஏதும் பிறப்பிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இரட்டை இலை சின்னம் தொடர்பாக தினகரன் தரப்பில் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தில்லி உயர்நீதிமன்றத்தில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் தனித்தனியாக கேவியட் மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரட்டை இலை விவகாரத்தில் தினகரன் தரப்பு மேல்முறையீடு செய்தால் தங்களை கேட்காமல் உத்தரவு ஏதும் பிறப்பிக்கக் கூடாது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...