தனியார் பேருந்து நிர்வாகத்தினரின் அத்துமீறலை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கோவை, நவம்பர் 27

தனியார் பேருந்து நிர்வாகங்களின் அத்துமீறிய நடவடிக்கைகளைத் தடுக்கக்கோரி அனைத்துத் தொழிற்சங்க அமைப்புகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. 



இது தொடர்பாக அவர்கள் அளித்துள்ள மனுவில், கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் மற்றும் உள்ளூர்களில் இயக்கப்படும் தனியார் பேருந்துகள் குறித்த நேரத்தில் இயக்கப்படுவதில்லை. பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து முன்னதாக செல்லவேண்டியிருந்தால், அதற்கு முன்பாகவே பயணிகளை ஏற்றி, அரசு பேருந்து ஒட்டுநரை எடுக்கச்சொல்லி வற்புறுத்துகின்றனர்.

மேலும், தனியார் பேருந்தின் நிர்வாகிகள் விரைவாக எடுக்கச்சொல்லி அரசு ஓட்டுநரை நிர்பந்தப்படுத்துவதாகவும், தங்களுக்கான நேரத்தை தாண்டியும் பயணிகளை ஏற்றுவதில் குறியாக இருப்பதாகவும் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆம்னி மற்றும் ரெகுலர் சர்வீஸ் என்ற பெயரில் அனுமதி பெறாமல் பேருந்து நிலையத்திற்கு வெளியில் வைத்து அடியாட்களை கொண்டு பயணிகளை நிர்பந்தித்து ஏற்றுவதாக கூறினர். தனியார் பேருந்துகளின் அத்துமீறல்களை சுட்டிக்காட்டும் அரசுப்பேருந்து ஒட்டுநர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவதுடன், கொலை மிரட்டல்களும் விடுப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

அனுமதிக்கப்படாத வழித்தடங்களில் தனியார் பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் இயக்கப்படுவதால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. வசூலை மையப்படுத்தி அதிவேகமாக இயக்கப்படும் தனியார் பேருந்துகளால் பயணிகளின் உடைமைக்கும், உயிருக்கும் உத்தரவாதமில்லாத நிலை ஏற்படுகிறது. எனவே, தனியார் பேருந்து நிர்வாகிகள் மற்றும் ஓட்டுநர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் எல்.பி எப்,சி ஐ டியூ உள்ளிட்ட ஒன்பது தொழிற்சங்க நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...